×

கடலூர் சோனாங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!

கடலூர்: கடலூர் சோனாங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 20 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி உள்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2018ம் ஆண்டு தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே நடந்த மோதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் அடித்து கொலை செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் வழக்கை விசாரித்து வந்த கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

The post கடலூர் சோனாங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Panchanathan ,Cuddalore ,Sonangupam ,Cuddalore court ,Sonangapam ,Dinakaran ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி